Header Ads



தகவல்களை பிறருக்கு பகிரமுன், உறுதி செய்துகொள்வோம் - ஜம்இய்யத்துல் உலமா


மனித வாழ்வின் அனைத்து விடயங்களுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாம் தொடர்பாடல் ஒழுங்குகளை எமக்கு கற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை இஸ்லாம் தடுத்துள்ளது. எனவே தகவல்களை உறுதி செய்ய முன்னர் பிறருக்கு பரப்புவதை தவிர்ந்து கொள்ளுமாறும் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவோர் இவ்விடயத்தில் அவதானமாக செயற்படுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ
(49:06)

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


3 comments:

  1. அடங்கவந்துட்டாங்க.... நம்மஸூபரிஸ்டாா்
    எதையுமே பாக்காமலும் விசாரிக்காமலும் இருக்கும் சில அமைப்புக்கள் எங்க ....

    ReplyDelete
  2. சரியான நேரத்தில் - சரியான தகவல். jazaakumullahu khairan.
    இதே போல எல்லா இடங்களிலும் பொருத்தமாக அல் குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் ஆலோசனைகள் வழங்கி மக்களை வழிநடாத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அழுதகைமையில் வீடுகளை எரிக்கப்படும் போது "கதவை மூடிக்கொண்டு உள்ளே இருங்கள்" என அறிவுரை கூறியது போலக் கூறாமல்.

    ReplyDelete
  3. அறிக்கை விட்டாச்சி எங்க வேலை முடிந்து விட்டது செரியா?

    ReplyDelete

Powered by Blogger.