Header Ads



மிகச் சிறந்த, வரவுசெலவுத் திட்டம் - சந்திரிக்கா புகழாரம்

அரசாங்கம் 2017 ஆம் ஆண்டுக்காக சமர்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் மிகச் சிறந்த திட்டம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் வறிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு பெருமளவில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தில் இல்லாத காரணத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் ஹந்துன்நெத்தி, பந்துல குணவர்தன போன்றவர்கள் வரவு செலவுத் திட்டத்தை குறை கூறி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஏற்கனவே இரண்டாக பிரித்துள்ளதாகவும் தாமரை மொட்டு கேலியானது. கொள்ளையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் சிறைக்கு செல்வதில் இருந்து தப்பிக்க தாமரை மொட்டு கட்சிக்கு செல்வார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.