35 மில்லியன் ரூபாய் கொள்ளை, திட்டம்வகுத்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் கைது
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், புறக்கோட்டையிலுள்ள நகைக்கடையொன்றில் இடம்பெற்ற 35 மில்லியன் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உதவிப் பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம், கலன்பின்னுவெவ என்ற இடத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் பரிசோதகர், குறித்த கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னணியிலிருந்து திட்டம் வகுத்துக்கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment