புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
-Fazrin Faleel-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ...
மதிப்பிற்குரிய சகோதர , சகோதரிகளுக்கு !
கொழும்பில் இருந்து நமது பகுதிக்கு கொண்டுவரப்படவுள்ள குப்பை விடயம் நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும் , இதனை எதிர்க்குமுகமாக பெரிய பள்ளியின் தலைமையின் கீழ் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம் . இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 14/10/2016 அன்று அதாவது வெள்ளிக்கிழமை ஜும்மாவின் பின்பு புத்தளம் பஸ் தரிப்பிடத்தில் நடைபெறவுள்ளது .இன்ஷா அல்லாஹ் ...
இந்த நிகழ்வு பெரிய அளவிலே இடம்பெற ஏற்பாடு நடைபெறுவதால் பெரிய பள்ளிக்கு ஏற்படும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் நிதி திரட்டும் ஒரு முயற்சியில் நாம் களமிறங்கி உள்ளோம் .இந்த முயற்சிக்கு உங்களையும் இணைப்பதற்கு ஆவல் கொள்கிறோம் . நீங்கள் கடந்த காலங்களில் பல நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று இந்த விடயத்திற்கும் ஒத்துழைப்பு தருவீர்கள் எனும் நம்பிக்கையும் நமக்கு நிறையவே உள்ளது .
ஆகவே , நீங்களும் உங்கள் பங்களிப்புக்களை வழங்கி பங்குதாரர் ஆகுங்கள் .
இந்த பங்களிப்பை நேரடியாக பெரியப்பள்ளி அலுவலகத்திலோ அல்லது கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்களிடமோ வழங்கி பற்று சீட்டுக்களையும் பெற்று கொள்ள முடியும் .
பங்களிப்புகளுக்கும் , மேலதிக தகவல்களுக்கும்
சகோ.அஸாருக்
078 970 6899
சகோ. அல்பர்
071 486 7252
சகோ.ஹாபிழ்தீன்
071 323 2269
masha allah good action
ReplyDeleteGarbage recycle system factory has to start in own respect area all over in Sri Lanka .not in some where else .I thing we all are not using our brain in proper way ,common let's start now '
ReplyDelete