Header Ads



தனக்கு திரு­மணம் செய்துவைப்­பதில், அக்­க­றை­ காட்டாத தந்தையை கொன்ற மகன்

தனக்கு திரு­மணம் செய்து வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் எவ்­வித  அக்­க­றை­யையும் காட்­ட­வில்லை என்­ற­ கோ­பத்­தினால் தந்தையை பொல்லால் தாக்கிக் கொலை செய்த மகனை  கைது செய்­துள்­ள­தாக மீரி­கம பொலி­ஸார் ­தெ­ரி­வித்­துள்­ளனர்.

திரு­மண பேச்­சு­வார்த்தை தொடர்பில் தனது தந்­தை­யுடன் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் மோத­லாக மாறி­ய­த­னை­ய­டுத்து குறித்த நபர் தனது தந்­தையை பொல்­லினால் தாக்கி கொலை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­தவர் மீரி­கம பொல­க­ல­கம பிர­தே­சத்தை சேர்ந்த எச்.ஏ.விம­ல­ரத்ன (55) என்­ப­வ­ராவார்.

இவ்­வாறு தனது தந்­தையை தாக்கி கொலை செய்த சந்­தே­க­நபர் 28 வய­தா­னவர் எனவும் அவர் போதை­வஸ்­து­க­ளுக்கு அடி­மை­யா­னவர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், தனக்கு திரு­மணம்  செய்து வைப்­பது தொடர்பில் தந்தை எவ்­வித அக்­க­றை­யு­டனும் செயற்­ப­ட­வில்­லை­யென தெரி­வித்தே சந்­தே­க­நபர் தனது தந்­தையை தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு தனது மகனால் தாக்­கப்­பட்ட நிலையில் வத்­து­பிட்­டி­வல வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு அவ­சர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்­று­வந்­தி­ருந்த நிலையில் நேற்­று­முன்­தினம் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

சம்­பவம் இடம்­பெற்­ற­த­னை­ய­டுத்து சந்­தே­க­ந­ப­ரான மகன் அப்­பி­ர­தே­சத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த நிலையில் பின்னர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

1 comment:

Powered by Blogger.