ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் தயாசிறி, பிட்டு வைத்திருந்தாரா..?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வாயில் பிட்டு வைத்திருந்தாரா என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் ஊழல் மோசடி மிக்கவர்கள் அமைச்சுப் பதவி வகிப்பதாக அண்மையில் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.
இழிவான முறையில் அரசியல் லாபமீட்டும் நோக்கில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு நடந்து கொள்வதாகவும் மஹிந்த அரசாங்கம் மீது ஒட்டுமொத்த நாடும் சர்வதேச சமூகமும் குற்றம் சுமத்திய வேளையில் தயாசிறி ஜயசேகர என்ன செய்து கொண்டிருந்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்துவதாக இருந்தால் அமைச்சரவையில் அவர் குற்றம் சுமத்த வேண்டுமே தவிர பிரச்சார நோக்கில் ஊடகங்களில் ஹீரோ போன்று கருத்து வெளியிடுவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தாம் நேருக்கு நேர் குற்றச்சாட்டுக்களை கூறியதாகவும் ஊடகங்களில் பிரச்சாரம் தேடியதில்லை எனவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
You are Right Dr. Rajitha
ReplyDelete