Header Ads



ரணிலின் நண்பருக்கு வழங்கவேண்டிய தண்டனையை, மைத்திரி தீர்மானிப்பார்

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு (ரணிலின் நண்பர்) வழங்கப்பட வேண்டிய தண்டனை ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் என, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இன்று -11- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய வங்கி பிணை மோசடிகள் குறித்த கலந்துரையாடல்களுக்காக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நிதிச் சபை கூடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மத்திய வங்கி பிணை மோசடிகள் தொடர்பில் விஷேட தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.