Header Ads



நீதிமன்றத்திற்கு இடையூறு விளைவித்த, ஞானசாரா நீதிமன்றில் ஆஜர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று -13- மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவே ஞானசார தேரருக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதிகளான விஜித் கே.மலகொட மற்றும் நீதிபதி பிரீத்தி பத்மன்ஆகியோர் முன்னிலையில் இந்த மனு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.