Header Ads



முஸ்லிம் விவாகவிவா­க­ரத்துச் சட்­டதிருத்­தம், குர்ஆன் ஹதீ­ஸுக்கு மாற்­றமாக அமையக்கூடாது­ - ரிஸ்வி முப்தி

நாட்டில் தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் முன்­வந்­துள்­ளமை நல்­லவோர் நகர்­வாகும்.

இந்த முயற்­சிக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை தனது பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். 

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தற்­போ­தைய சூழ­லுக்­கேற்ப குர்ஆன் மற்றும் ஹதீ­ஸுக்கு மாற்­ற­மில்­லாத வகையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்­பதை அர­சாங்­கத்­துக்கு வலி­யு­றுத்­து­வ­தா­கவும் அவர் கூறினார்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்கு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷவினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப­குழு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வது தொடர்பில் ஆராய 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ரினால் ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு தனது அறிக்­கையை தயா­ரித்­துள்­ளது.

உல­மாக்­களும் அக்­கு­ழுவில் அங்கம் வகிக்­கின்­றனர். அந்­தக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களும் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக உல­மா­சபை கடந்த காலங்­களில் உல­மாக்­க­ளு­டனும் துறைசார் நிபு­ணர்கள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட குழு­வு­டனும் 20க்கும் மேற்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்­தி­யி­ருக்­கி­றது. இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு உலமா சபை கடந்த காலங்­களில் பாரிய பங்­க­ளிப்­பினைச் செய்­துள்­ளது. அர­சாங்­கத்தின் இந்த நல்ல முயற்­சிக்கு உலமா சபை தொடர்ந்தும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும்.

மேலும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விரைவில் சந்­தித்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளமை தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதே­வேளை ஓய்வு பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தன­து­குழு எதிர்­வரும் 6 ஆம் திகதி கூடி முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாகத் தெரி­வித்தார். தனது குழு­வி­னது சிபார்­சுகள் நவம்பர் மாதம் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிடம் சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் கூறினார். 

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட மூலத்தை திருத்­து­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. இதற்­கென அமைச்­ச­ரவை முஸ்லிம் அமைச்­சர்­களை உள்­ள­டக்­கிய உப­கு­ழு­வொன்­றினையும் நிய­மித்­துள்­ளது. 

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திரு­மணம் முடிப்­ப­தற்­கான குறைந்த வய­தெல்லை மற்றும் இச் சட்­டத்தின் கீழ் காணப்­படும் வேறு விட­யங்கள் தொடர்பில் உள்ள சட்ட விதப்­பு­ரைகள் சர்­வ­தேச நிய­மங்­களில் குறிப்­பிட்­டுள்ள நியாய ஒழுக்­கங்­க­ளுக்கு ஒத்­தி­சை­யாத கார­ணத்­தி­னாலே இச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளது. 

இலங்­கைக்கு ஜி.எஸ்.பி.வரிச்­ச­லு­கையைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே இச்­சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக சட்­டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார். 

விடிவெள்ளி ARA.Fareel-

No comments

Powered by Blogger.