Header Ads



சவூதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய தாக்குதலில் 90 பேர் மரணம்


ஏமன் தலைநகர் சனாவில் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டோர் மீது செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு முன்னணி போராளியின் உறவினரின் இறப்பை தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ஏமன் அரசாங்கம் சண்டையிட்டு வருகிறது.
ஏமன் அரசிற்கு செளதி தலைமையிலான கூட்டணி படையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படும் இஸ்ரேல்,அமெரிக்கா இராணுவ வீரர்களை கொன்றதாக சவுதிக்கு சரித்திரம் ஏதும் உன்டா அல்லது ஜனநாயக முஸ்லீம் நாடுகளுக்கு எதிராக செயற்பட்ட சரித்திரம் உன்டா ?

    ReplyDelete

Powered by Blogger.