Header Ads



வக்பு சொத்­து­கள் மோச­டிகள் தொடர்­பாக. நாடெங்­கி­லு­மி­ருந்து 80 முறைப்­பா­டுகள்

வக்பு சொத்­து­களில் இடம்­பெற்­று­வரும் ஊழல்கள் மற்றும் மோச­டிகள் தொடர்­பாக நாடெங்­கி­லு­மி­ருந்து சுமார் 80 முறைப்­பா­டுகள் வக்பு சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்­ர­ஸாக்­க­ளுக்கு வக்பு செய்­யப்­பட்­டுள்ள சொத்­துகள் தொடர்­பா­கவே அதிக முறைப்­பா­டுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

முறைப்­பா­டு­களை அனுப்பி வைத்­தி­ருக்கும் பொது­மக்கள் இம்­மோ­ச­டிகள் தொடர்­பான விசா­ர­ணை­களை உடன் ஆரம்­பிக்­கு­மாறு வக்பு சபைக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தி­ருக்­கி­றார்கள்.

வக்பு சொத்­துகள், மோச­டிகள் தொடர்­பி­லான ஆவ­ணங்­களைச் சமர்ப்­பிப்­ப­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் விசா­ர­ணை­களின் போது சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­பு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீனை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­ய­போது வக்பு சபைக்கு வக்பு சொத்­துகள் தொடர்­பாக கிடைத்­துள்ள முறைப்­பா­டுகள் வக்பு சபை செய­லா­ள­ரினால் தற்­போது தரப்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கி­றது. முறைப்­பா­டுகள் அனைத்தும் பூர­ண­மாக வாசிக்­கப்­பட்டு ஒவ்­வொரு முறைப்­பாட்­டி­னதும் தன்­மைக்கு ஏற்ப தரப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. அதன்­பின்பு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அழைத்து விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வக்பு சொத்­துகள் ஊழல் மோச­டி­க­ளி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும்.

வக்பு சபை சில பள்­ளி­வா­சல்­களின் வக்பு சொத்­துகள் தொடர்­பான விப­ரங்­களைச் சேக­ரிப்­ப­தற்கும் அவற்றைப் பாது­காப்­ப­தற்கும் விசேட டிரஸ்டி சபை­களை நிய­மித்­துள்­ளது. இதன் மூலம் பல நன்­மை­களைப் பெற்­றுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு நகர் பள்­ளி­வா­சலை இதற்கு உதா­ர­ண­மாகக் கொள்­ளலாம். இப்­பள்­ளி­வா­சலின் வக்பு சொத்­து­களைத் தேடி பட்­டி­ய­லிட்டு பாது­காப்­ப­தற்­காக விசேட டிரஸ்டி சபை வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டது.

அந்த டிரஸ்டி சபை வக்பு சொத்­து­களை பட்­டி­ய­லிட்டு பாது­காத்து வரு­வ­துடன் ஊழல்கள் ஏற்­படா வண்ணம் முன்­னேற்­பா­டு­களைச் செய்­துள்­ளது. இந்த டிரஸ்டி சபையை ஏனைய பள்ளிவாசல்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

வக்பு சொத்து அல்லாஹ்வின் சொத்தாகும். அது மக்களின் நம்பிக்கை நிதியமாகும். இச்சொத்துகளை தனியார் அனுபவிப்பதற்கோ கையாள்வதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.

No comments

Powered by Blogger.