Header Ads



சாம்சங் கேலக்ஸி நோட் 7 - தயாரிப்பு நிரந்தரமாக நிறுத்தம்


தென் கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் 7 திறன்பேசியின் தயாரிப்பை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் ஆய்வக சோதனையின்போது, கேலக்ஸி நோட் 7 செல்பேசி தீ பற்றி எரிந்தது

இந்த வகை செல்பேசிகள் சில தீ பிடிப்பதால் பாதுகாப்புக்கு அச்சுறுதல் என்று அறிக்கைகள் வெளிவந்த பிறகு இந்த நடவடிக்கையை சாம்சங் நிறுவனம் எடுத்துள்ளது.

முதலில் இந்த வகை செல்பேசிகளின் விற்பனையை நிறுத்துவதாக சாங்சங் அறிவித்தது.

பின்னர் இந்த ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துவோர், பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும், அதை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சாம்சங் நிறுவனம் கூறியது.

பேட்டரியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக இந்த வகை செல்பேசிகள் தீ பற்றி எரிகின்ற நிகழ்வுகள் தொடர்ந்து கூறப்படுவதாலும், இந்த பிரச்சனையின் காரணமாக மாற்றி வழங்கப்பட்ட செல்பேசிகள் சிலவற்றிலும் அதே பிரச்சனை தொடர்வதாலும், சாம்சங் இந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

ஏற்கெனவே இந்த வகை செல்பேசிகள் தயாரிக்கும் அளவை சாம்சங் குறைத்திருந்தது.

கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை வாங்கியிருப்போர் அதற்கான தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் அல்லது வேறு வகையான சாங்சங் செல்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.



No comments

Powered by Blogger.