Header Ads



மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு - 'குடு சூட்டி' உள்ளிட்ட 4 பேர் பலி

மட்டக்குளி - சமித்புற பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும் ,மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு தலைவரான “குடு சூட்டி” என்ற நபரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை , பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.