Header Ads



யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது, வாள் வெட்டு - 2 பேர் படுகாயம்


சுன்னாகம் நகரப்பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்நநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் சுன்னாகம் நகரப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீதே இ்ந்த வாள்வெட்டு  தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக  சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு கையிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2ஆம்  இணைப்பு
 சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் நிமல் பண்டார கையில் வெட்டுக்காயங்களுடனும் நவரத்ன என்பவர் தலையில் வெட்டுக்காயத்துடனும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பூட்சிற்றிக்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1 comment:

  1. For the GOODWILL of the peace of this land. Being tolerant is important on both parties.

    Easy to create and ignite issue but difficult to put it down as it will cost lots of human life who loves peace.

    ReplyDelete

Powered by Blogger.