Header Ads



UNP யின் வெற்றியை தடுக்கமுடியாது - SLFP செயலாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனிக்கட்சியை ஆரம்பித்தால், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி புதிய கட்சியை தொடங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுப்படும்.

எவ்வாறாயினும் இந்த சவாலை வெற்றிக்கொள்ள தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.