Header Ads



இனவாதத்தினை தூண்டுவதே, விக்­கி­னேஸ்­வரனுக்கு அவசியமாக உள்ளது - JVP

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரனுக்கு இனவாதத்தினை தூண்டுவதே அவசியமாக உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்­துன்­நெத்தி குற்றம் சுமத்­தியுள்ளார்.

நேற்று முன்தினம் (24) யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியின் போது முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் ஹந்­துன் ­நெத்தியிடம் வின­விய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­னோ­ருக்கு தற்போது தேவை­யா­னது சமஷ்டி தீர்­வல்ல, அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவ­சி­ய­மாக உள்­ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள மக்களிடையே பிரி­வி­னை ­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இவர்கள் முயற்­சிக்­கின்­றனர், இது தவறான விடயம்.

எனவே ஒற்றையாட்சி மூலம் மாத்திரமே அதி­காரப் பர­வ­லாக்கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. The Tamil community has missed many chances because of their leaders. As one country without any division, the Tamil leaders should do their best to get maximum possible rights of the Tamil community through democtatic process under Yahapaalanaya. Thirty years suffering is enough.

    ReplyDelete
  2. Racist Vicky should be arrested and should be behind bars.

    ReplyDelete

Powered by Blogger.