Header Ads



“இலங்கையின் இடி அமீனே, ராஜபக்ஷ மலேசியாவை விட்டு ஓடு ஓடு”


மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்று பலத்த எதிர்ப்பாக மலேசிய தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

புத்ரா உலக மையத்தில் நடைபெறும் ஆசிய - பசுபிக் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிற்கு தலைமையேற்று மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று மஹிந்தவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மலேசிய தமிழர்கள், இன்று அவர் புத்ரா உலக மாநாட்டு மையத்தில் உள்ளார் என்ற தகவல் மலேசிய தமிழர்கள் மத்தியில் பரவியதையடுத்து மலேசியத் தமிழர்கள் குறித்த கட்டடத்தை முற்றுகையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாக மண்டபத்தை சுற்றி பாதுகாப்பு நிமித்தம் மலேசிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை “இலங்கையின் இடி அமீனே” ”ராஜபக்ஷ மலேசியாவை விட்டு ஓடு ஓடு” என்ற பதாகைகளை ஏந்தியவாறு, ஆக்ரோசமான கோஷங்களையும் மலேசியத் தமிழர்கள் எழுப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.



3 comments:

  1. மஹிந்தவை இடி அமீனோ ஒப்பிடாதீர்கள். இடி அமீனின் உண்மையான பெயர் ஈத் அமீன். அவர் இஸ்லாமிய ஆட்சியாளர். அவரது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத பெண்கள்கூட முழங்காலுக்கு கீழேதான் உடுப்பு அணிய சட்டம் இருந்தது. அவரை மேற்கத்தேயர்கள் ஆட்சியிலிருந்து நீக்கியதோடு அவரைப்பற்றி மோசமாக ஊடகங்கள் மூலமாக தவறான மனிதனாக வெளிப்படுத்தியும் உள்ளனர். அநேக முஸ்லிம்கள்கூட தினமுரசில் வந்த கதைகளை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  2. He's going Japan,he's going Korea, going Thailand
    going Europe and now in Malaysia ! What is this
    joke he is playing ? What is he trying to prove
    to the locals here ? He is elected to parliament
    but dumb on debates and noisy outside ! Why is
    this man's jokes get publicity in medias ? He
    should be locked up and shut up for the rest of
    his life . He shouldn't be allowed to play fool
    with the general public anymore. he was allowed
    to waste foreign exchange in billions when he
    was in power and now without power , as much as
    he can on tours ! FOOLS PARADISE.

    ReplyDelete
  3. அடித்த காசை எப்படியாவது செலவரழிக்க வேண்டாமா? விடுங்கசார் அவர் எல்லா இடதிற்கும் போய்வரட்டும். அப்படியேனும் அவர் ஜனாதிபதி இல்லை என்ற ஏக்கத்தை தனிக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.