Header Ads



கல்ஹின்னை சம்பவம் இனவாதமல்ல - சிங்களவர், முஸ்­லிம்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவே வாழ விரும்­பு­கி­றார்கள்

-விடிவெள்ளி  ARA.Fareel-

கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­பவம் இன­வாத செய­லல்ல. மது போதையில் இருந்­த­வ­ரா­லேயே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. 

இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்­பான்மை மக்கள் முஸ்­லிம்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவே வாழ விரும்­பு­கி­றார்கள் என அங்­கும்­புர இஹ­ல­முல்ல பன்­ச­லையின் இஹ­ல­முல்ல சுகுன குண­வன்ச தேரர் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்­சரிடம் தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஹலீம் "கல்­ஹின்னை சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து சிலர் இன­வா­தத்­தைத்­தூண்ட முயற்­சிக்­கி­றார்கள். இந்த முயற்­சிக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. கல்­ஹின்னை மற்றும் அங்­கும்­புர பகு­தி­களில் சமா­தா­னத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான சகல முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன" என்றார்.

அமைச்சர் ஹலீம் நேற்று முன்­தினம் மாலை அங்­கும்­புர இஹ­ல­முல்ல பன்­ச­லைக்கு விஜயம் செய்தார். அமைச்­ச­ருடன் முஸ்­லிம்­களும் பன்­ச­லைக்குச் சென்­றனர். அங்­கும்­புர மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை பொலி­சாரும் அங்கு சென்­றி­ருந்­தனர். 

அங்கு இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கலந்­து­ரை­யாடல் ஒன்று நடை­பெற்­றது. கல்­ஹின்னை சம்­ப­வத்­தை­ய­டுத்து அப்­பி­ர­தே­சத்தில் அமை­தியை நிலை­நாட்­டு­வது தெடர்பில் ஆரா­யப்­பட்­டது.

இச்­சந்­தர்­ப்பத்­திலே இஹ­ல­முல்ல பன்­ச­லையின் தேரரும் அமைச்சர் ஹலீமும் இவ்­வாறு கருத்து தெரி­வித்­தனர்.

அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம் கல்­ஹின்னை சம்­பவம் தொடர்பில் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில், இரு­த­ரப்பு மதத்­த­லை­வர்கள் மற்றும் ஊர்ப் பிர­மு­கர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்­பொன்­றினை ஏற்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. 

இதன் முதல் கட்­ட­மாக தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஆறு பேரையும் பிணையில் விடு­விப்­ப­தற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கி­றது. பிணை வழங்­கு­வதை பொலி­சாரும் எதிர்க்­க­வில்லை. நாளை புதன்­கி­ழமை சந்­தே­க­ந­பர்கள் அறு­வரும் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

இவர்­களில் ஒருவர் முஸ்லீம் இளை­ஞ­ராவார். சந்­தே­க­ந­பர்கள் விளக்­க­ம­றி­யலில் இருப்­பதே சமா­தான முயற்­சிக்குத் தடை­யாக இருக்­கி­றது.

பெரும்­பான்மைச் சமூ­கத்தைச் சார்ந்த பெரும்­பா­லானோர் சமா­தா­ன­மாக பிரச்­ச­னைகள் இன்றி வாழ்­வ­தையே விரும்­பு­கின்­றனர். ஒரு சிலரே பிரச்­ச­னை­க­ளுக்குக் கார­ண­மாக இருக்­கின்­றனர். இவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டி­யது மதத்­த­லை­வர்­களின் கட­மை­யாகும்.

கல்­ஹின்னை பிர­தே­சத்தில் இன­வி­ரோத செயல்­களைத் தடுக்கும் வகையில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமர் இதற்கான உத்தரவுகளைப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளார் என்றார்.

இதே­வேளை கல்­ஹின்னை பகு­தியில் இடம்­பெற்று வந்த இன­வா­தத்தைத் தூண்டும் நட­வ­டிக்­கைகள் முடி­வுக்கு வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

18 comments:

  1. அமைச்சர் ஹலீம் பிக்குவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பாரோ?

    ReplyDelete
    Replies
    1. அது வழமையா நடக்குற விஷயம் தானெ

      Delete
    2. என்ன உங்கள் இத்துப்போன அரசியல்வாதிகள் அப்படித்தான் செய்வார்களோ? இரு சமூகங்கள் பிரச்சினைப் பட்டால் அதில் குளிர்காய விரும்பும் சமூகமே உங்கள் சமூகம் . அதுதான் இறைவன் உங்களுக்கு நல்ல பாடத்தை கறபித்தான் 2009 may இல்.. என்னா... அடி !!!

      Delete
    3. அடேய் மடயா!!
      நாங்க அடி குடுத்தம் அடி வாங்கினம். உங்களமரி அடி வாங்கி வாங்கி அவனோடயே கிடக்கேல்ல.
      18ம் நூற்றாண்டில இருந்து அடி வாங்குறீங்க இனியும் வாங்குவீங்க.
      உங்கள மாரி எவ்வளவவு அடீ வாங்கினாலும் வலிக்காத மாரியே நடிக்க எங்களுக்கு தெரியாதுப்பு!!

      Delete
    4. நாம் அடி வாங்கி ஓரு நாள் உயிரிளந் தொம் எம்மை கொன்றவனை உயிருடன் வைத்து தினம் தினம் சாகடிக்கிறொம்.

      Delete
  2. அது உங்களைப்போன்ற சககிலியன்கல் செய்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. Neenga y sandaipidikkiringa

      Delete
    2. அனியாயமாக சக்கிலியனை கேவலப்படுத்த வேண்டாம் . இவன் சக்கிலியனுக்கும் சக்கிலியன்

      Delete
  3. Mr.Ajan Attathonikku yaro soni nallla arrail vetteruppan pol.athuthan ivallavu kopaththukkum reason.

    ReplyDelete
  4. http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_877.html?m=1 இத கொஞ்சம் படிங்க அன்டனி

    ReplyDelete
  5. உங்களுக்கு வேர வேலயே இல்லயா ? இல்ல இது தான் full time job as?

    ReplyDelete
  6. நிமிர்த்த முடியாதது நாய் வால் மட்டுமல்ல, ajan antonyraj போன்றோரின் குணத்தையும் தான். நேராக இருக்க வேண்டியது பிறப்பு மட்டுமல்ல வளர்ப்பும் கூடத்தான்.

    ReplyDelete
  7. enna sambawam nu explain kudukke palahunge appe thaan new viewers kum puriyum

    ReplyDelete
  8. anuraj and anwer cmnt check pannaamala publishd aachu

    ReplyDelete
  9. hhhhhhoooooooooooooooo yahapalanaya

    ReplyDelete

Powered by Blogger.