Header Ads



வடகிழக்கு இணைவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை - அமைச்சர் சரத் அமு­னு­கம

-விடிவெள்ளி ARA.Fareel-

முஸ்லிம் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும்.

இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில் நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை பேணிக்­கொண்டு இலங்­கையர் என்ற பொது­வான அடை­யா­ளத்­துடன் வாழ வேண்டும் என விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்தார். 

நேற்­று­முன்­தினம் மாலை கொழும்­பி­லுள்ள லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நடை­பெற்ற, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாரா­ளு­மன்ற உரை உள்­ள­டங்­கிய 'முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை கேளுங்கள்' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் சரத் அமு­னு­கம மேற்­கண்­ட­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

நானும் அவரும் ஒன்­றாகக் கட­மை­யாற்­றினோம். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தினோம். அப்போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யி­லி­ருந்தார். நாம் எதிர்க்­கட்­சியில் இருந்தோம்.

நாம் பல இனங்­க­ளாக வாழ்ந்தாலும் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறோம். சிங்­க­ளவர், முஸ்லிம், தமிழர் என்ற பிள­வில்­லாது இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் இருக்­கிறோம்.

13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிக் குறிப்­பி­ட­வேண்டும். இத்­தி­ருத்தம் பல அபி­வி­ருத்­தி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது. இவற்றில் முஸ்­லிம்­களின் அர­சியல் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைக் குறிப்­பி­டலாம்.

ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் காலத்தில் இந்­தியா– இலங்கை உடன்­ப­டிக்­கையின் கீழேயே 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.  தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­னணி தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரே குழு­வுக்குள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­றது. உடன்­ப­டிக்கை ஜே.ஆர். ஜய­வர்­தன மற்றும் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தி­யினால் கையொப்­ப­மி­டப்­பட்­டது. 

இலங்­கை­யி­லி­ருந்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் இந்த உடன்­ப­டிக்­கைக்கு தர­க­ராகச் செயற்­பட்டார்.

முஸ்­லிம்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய டாக்டர் கலீலும் ஜே.ஆர். ஜய­வர்­த­ன­விடம் வந்­தார். இந்த மக்­களின் கருத்தை அறி­வ­தற்­கான பொது­ஜன வாக்­கெ­டுப்பு முறையில் பாரிய பிரச்­சினை இருப்­ப­தாகத் தெரி­வித்­தார். வடக்கும் கிழக்கும் இணை­வதால் முஸ்லிம் சமூகம் பாதிக்­கப்­படும் என்­பதை விளக்­கி­னார்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் தற்­கா­லி­க­மாக வடக்கும் கிழக்கும் இணை­வதனால் முஸ்­லிம்கள் தமது உரி­மைக்­கான குரலை இழந்து விடு­வார்கள் என்று தெரி­விக்கப்பட்டது.

இத­னை­ய­டுத்தே வடக்கும் கிழக்கும் இணை­வது குறித்து விவாதம் நடை­பெற்­றது. தமிழ் பிர­தி­நி­திகள் வடக்கும் கிழக்கும் நிரந்­த­ர­மாக இணைய வேண்டும் என்­றார்கள்.

இதேவேளை அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ெஜய­வர்­தன வடக்கும் கிழக்கும் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட வேண்­டுமா அல்­லது வடக்கும் கிழக்கும் பிரிந்து இருக்க வேண்­டுமா என்­பது தொடர்பில் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் என்றார். என்­றாலும் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வில்லை.

ஏனென்றால் முஸ்லிம்களும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களும் ஒன்று சேர்ந்து கொள்­வார்கள் என்று தெளி­வா­கி­யது. அதனால் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டக்­கூ­டாது என தமிழ் அர­சியல் தலை­வர்கள் வேண்­டி­னார்கள். இந்தப் பிரச்­சி­னை­யை­ய­டுத்து பெரும்­பா­லான தமி­ழர்கள் நாட்டை விட்டும் வெளி­யே­றி­னார்கள். 

இறு­தியில் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்கும் கிழக்கும் உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­பின்­படி இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் சிறப்­பு­ரி­மைகள் தொடர்­பாக குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் உரி­மைகள் கேள்­விக்­கு­றி­யா­கிய ­சந்­தர்ப்­பத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மிகவும் பல­மான ஆத­ர­வா­ளரான டாக்டர் கலீல்,  ஜே.ஆர். ெஜய­வர்­த­னவைச் சந்­தித்தார். சந்­தித்து 'தாங்கள் என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் என்று தெரி­யாது. நீங்கள் விரும்­பி­யதை செய்­யுங்கள்' என்றார்.

இதற்குப் பிறகே கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கான கட்­சி­யொன்று உரு­வா­கி­யது. இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே லக்ஷ்மன் கதிர்­காமர் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் தனது கருத்­து­களை முஸ்லிம்களுக்கு ஆதரவாக வெளியிட்டார். 

முஸ்­லிம்கள் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. முஸ்­லிம்கள் கிழக்கில் தனி­யான மாகாண சபை­யையே கோரி நிற்­கின்­றனர். 

இன்று வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண சபைகள் இயங்­கு­கின்­றன. முஸ்­லிம்கள் தங்­க­ளுக்கு கிழக்கில் தனி­யான மாகாண சபை கிடைத்­துள்­ளமை குறித்து மகிழ்ச்­சி­ய­டைய முடியும். முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கு பிரிந்­தி­ருப்­ப­தையே விரும்­பு­கி­றார்கள். 

அஷ்ரப் முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஆரம்­பத்தில் கிழக்­கில் தனி கட்­சியை ஆரம்­பித்தார். அதன்­பின்பு தேசிய ரீதியில் சகல மக்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு நுஆ கட்­சியை ஆரம்­பிக்க தீர்­மா­னித்தார். இது சிறந்த முயற்­சி­யாகும். ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பத்தில் தேசிய கட்­சி­யொன்­றினை நினைத்­தி­ருக்­க­வில்லை. என்­றாலும் அஷ்ரப் இன்று உயி­ருடன் இல்லை. 

லக்ஷ்மன் கதிர்காமர் தெளிவாக ஒரு விடயத்தை கூறியிருக்கின்றார். நாம் எந்த இனத்தவராக இருந்தாலும் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கிடையே அன்பு செலுத்த வேண்டும். எமது கலாசாரங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இலங்கையராக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனமும் தங்களுக்கிடையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார். 

நிகழ்வில் ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சிராஜ் மஷூர், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்,  ஆய்வாளர் ரிஷா யஹ்யா, திருமதி. சுகந்தி கதிர்காமர் ஆகியோரும் உரையாற்றினர். 

2 comments:

  1. Thank you for your understanding Mr. Sarath.

    ReplyDelete
  2. What came from the mouth of Hon. Sarath Amunugama is the truth.I thank him and appreciate him. He is a great example.Wickneswaran and people of his calibre must learn lessons from Sarath Amunugama.

    ReplyDelete

Powered by Blogger.