Header Ads



"மதவாதம், இனவாதம் என்ற விஷ கிருமியை செலுத்தி நாட்டை அழிக்க முற்படுகின்றனர்"

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தற்போது தமிழ் இனவாதிகளின் சிறைக்கைதிகளாக மாறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தலைவர்களும் இனவாதிகளின் சிறைக்கைதிகளாக மாறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மீண்டும் மதவாதம், இனவாதம் என்ற விஷ கிருமியை எமது சமூகத்துக்குள் செலுத்தி நாட்டை அழிக்க முற்படுகின்றனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கோரும் சில போராட்டத்தின் பின்னணியில் சில இனவாதிகளும், மதவாதிகளும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.