Header Ads



துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு, மரண தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராத லக்மன் பிரேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாக்கு நீதிமன்ற் சற்றுமுன்னர் 08-09-2016 மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் கொலை வழக்கிற்கு 5 வருடங்களுக்குப் பிறகு இறுதி தீர்ப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு இன்று மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவினை  மேல் நீதிமன்ற நீதபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் வழங்கியுள்ளது.



4 comments:

  1. நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ இந்த நாட்டில் நீதி கொஞ்சம் இருக்கிறது...

    ReplyDelete
  2. End of Jungle rule, perhaps, another result of Yahapalanaya!

    ReplyDelete
  3. Warawetka takka oru teerppu.welcome.

    ReplyDelete
  4. Death sentence is announced. But will it be implemented or not????

    ReplyDelete

Powered by Blogger.