Header Ads



பேரப்பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருக்க, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தாய்

மாத்தறை மாவட்டத்தில் மொரவக்க வெளிவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று -26- அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 57 வயதான தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலை சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மொரவக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் கொலை செய்யப்படும் போது 6 மற்றும் 7 வயதான அவரது பேரப்பிள்ளைகள் அருகில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.