Header Ads



மைத்திரியை சிரிப்பில் ஆழ்த்திய, ருசிகர சம்பவம்

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியான ருசிகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது “அதி மேதக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச” என விழித்துள்ளார்.

மஹிந்தவை ஜனாதிபதி என அவர் கூறும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறித்த மேடையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றின் போதே மலித் ஜயதிலக்கவினால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எனினும் தனது தவறினை உணர்ந்த கொண்ட மலித் ஜயதிலக்க, கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார். தனது தவறுக்காக விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.

மைத்திரி என கூறும் போது “ம” எழுத்திற்கு பின்னர் “இ” என உச்சரிக்கப்படுவதாகவும் மஹிந்த என கூறும் போது “இன்” என உச்சரிக்கப்படுவதாகவும், கூறியவர் இதனால் இவ்வாறு பிழை ஏற்படுவதாக கூறிய போது ஜனாதிபதி உட்பட சிரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.