Header Ads



இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம், சூழ்ச்சித் திட்டமாக இருக்கலாம்

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட சம்பவம் சூழ்ச்சித் திட்டமாக இருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் ஓர் சூழ்ச்சித் திட்டத்தின் விளைவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது இப்ராஹிம் அன்சார் எவ்வித பாதுகாப்பும் இன்றி தனியாக இருப்பதனால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்கு குழப்ப நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த  ஓர் நிலையில் உயர்ஸ்தானிகர் அன்சார் எவ்வித பாதுகாப்பும் இன்றி தனியாக செல்வது ஆச்சரிமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த தாக்குதலை ஜாதிக ஹெல உறுமய கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.