Header Ads



சர்வதேச இஸ்லாமிய மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பம் - முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்பு

- விடிவெள்ளி ARA.Fareel-

உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

‘முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும்’  எனும் தலைப்பில் இன்று அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டில் பிர­தம அதி­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்­ள­வுள்ளார்.

இன்று காலை அல­ரி­மா­ளி­கையில் ஆரம்­பித்து வைக்­கப்­படும் இம் மாநாடு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், நாளை காலை 9 மணி­முதல் 11 மணி­வ­ரையும் பின்பு ஜும்ஆ தொழு­கை­யை­ய­டுத்து 3 மணி­முதல் 6 மணி­வ­ரையும் கொழும்பு விளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இம்­மா­நாட்­டுக்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் இலங்கை இஸ்­லா­மிய நிலை­யத்தின் தலை­வரும் முன்னாள் கொழும்பு மேயரும், சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூத­ரு­மான எம்.ஹுசைன் மொஹமட் மேற்­கொண்­டுள்ளார்.

சவூதி அரே­பியா, பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான், தாய்­லாந்து, பிலிப்பைன், இந்­தியா, தாய்வான், நேபாளம், கம்­போ­டியா, மியன்மார், சீனா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இலங்கைப் பிர­தி­நி­தி­களும் இதில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர்.
உலக இஸ்­லா­மிய லீக்கின் பொதுச் செய­லாளர் கலா­நிதி அப்­துல்லா பின் அப்துல் முஹ்ஸின் அல் துர்க்கி இம் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக கடந்த 7ஆம் திக­தி இலங்கை வந்­த­டைந்­துள்ளார்.

விளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டின் அமர்­வு­களில் மாற்று மதத்­த­லை­வர்­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சீனாவின் பௌத்த சம்­மே­ள­னத்தின் உதவித் தலைவர் சூசாங் தேரர், இந்­தியா கேர­ளாவைச் சேர்ந்த கலா­நிதி அப்துல் சலாம் எமா­யக்கர் அஹமட், பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் கலகே சும­ண­சிறி தேரர், தாய்­லாந்து பட்­டானி பல்­க­லைக்­க­ழக வேந்தர் கலா­நிதி இஸ்­மாயில் லுப்தி ஜவா­கியா, கலா­நிதி வர்மா ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மற்றும் பங்­க­ளாதேஷ் ஐம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் பேரா­சி­ரியர் அப்­தெல்மான் அபு­சத்தார் மொஹமட் மற்றும் கேரளா மேல் நீதி­மன்ற நீதி­பதி பி.கே.சம்­சுதீன், பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த கலா­நிதி அப்துல் கைர் டராசன், இலங்­கையைச் சேர்ந்த கலா­நிதி பச்­ச­மல அபித் ஹுசைன்­மியா ஆகி­யோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செய­லாளர் கலா­நிதி அல்­துர்க்­கியும் உரை­நி­கழ்த்­த­வுள்ள அதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மாநாட்டில் ஆய்­வ­றிக்­கை­யொன்­றி­னையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் மாநாட்டில் கலந்துகொள்வார்.

மேலும் ஹர­விந்தர் சிங் சர்மா, கலாநிதி எம்.மஸாஹர் செய்யத் மொஹமட், கலாநிதி டக் குங்சான், கலாநிதி மொஹமட் ருவைஸ் ஹனிபா, கலாநிதி சாந்திலால் கே.சோமையா, அஷ்ஷெய்க் அகார் மொஹமட், கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் உட்பட மேலும் பலர் உரையாற்றவுள்ளனர்.

No comments

Powered by Blogger.