Header Ads



சுதந்திரக் கட்சியில் தீவிரவாதிகள்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்கத்தை சிதைப்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்கத்தை சிதைப்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை. இவ்வாறானவர்கள் கட்சியில் இருப்பதற்கே தகுதியற்றவர்களாகின்றார்கள்.

கட்சியின் தலைமையகம் என்பது தேவாலயம் போன்றது. குறித்த தேவாலயத்திற்கு முன்பு ஊ சத்தம் எழுப்புபவர்களை எமது கட்சியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதேவேளை, கட்சிக்குள் தீவிரவாதிகளை அனுமதிக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.