Header Ads



விக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடு குறித்து ஞானசாரர்

ஜே.வி.பி. கட்சி பௌத்த மதத்திற்கு அழிவை ஏற்படுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பௌத்த மதத்திற்கு ஜே.வி.பி கட்சியும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் செய்து வரும் அழிவுகள் பற்றி விரைவில் மாநாயக்கர்களிடம் முறைப்பாடு செய்யப்படும்.

பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் கூடுதலான அழிவினை ஜே.வி.பி மேற்கொண்டு வருகின்றது.

சர்வமத அமைப்பு என்ற பெயரில் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கின்றனர்.

பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளும் பௌத்த பிக்குகளை ஜே.வி.பி தனது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது.

இந்த நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலித் தலைவர் ஒருவர் சிங்கள மக்களை விரட்டி வருகின்றார்

தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் தலைவர் ஒருவர் சிங்கள மக்களை கிராமங்களிலிருந்து விரட்டியடிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கடயைமாற்றிய சின்னமன் என்பவரும் அவரது அடியாட்களும் இணைந்து வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய சிங்கள கிராமங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

குறித்த புலித் தலைவர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்ற போதிலும் உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை.

சிங்கள் மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.

முதலமைச்சரின் இனவாத செயற்பாடுகளினால் முன்னாள் புலிகள் கிளர்ச்சியடைந்து இனவாத அடிப்படையில் செயற்படுகின்றனர்.

முதலமைச்சரின் ஆதரவுடன் சின்னமன் குண்டர் கூட்டமொன்றை உருவாக்கியுள்ளார்.

வடக்கின் பாரம்பரிய சிங்கள கிராமங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

சின்னமன் ஆயுதங்களுடன் சென்று கிராம மக்களை அச்சுறுத்துவதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.