Header Ads



கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்தது மைத்திரியும் ரணிலுமே..!!

கடந்த அரசாங்கம், இந்த நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

படைத்தரப்பை காட்டி நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இலங்கையை சுபீட்சமிக்க நாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசங்கவும் இணைந்து கட்டியெழுப்பி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 

இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற செமட்ட செவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் விசிறிநிவாச காசோலை வழங்கல் மற்றும் உறுதிப்பத்திரம் கட்டிடப்பொருட்கள் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இத்திட்டத்தின் கீழ் 412 பேருக்கு வீடமைப்பு காசோலைகள், 215 பேருக்கு சீமேந்து பைகள், 85 பேருக்கு தொழில் பயிற்சி உபகரணங்கள என்பன சுமார் 7 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டன. 

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

1 comment:

Powered by Blogger.