காஷ்மீரில் நடந்துவரும் அக்கிரமங்கள் தொடர்பாக, மைத்திரியிடம் முறைப்பாடு
இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி கொழும்பு வந்திருந்தார்.
நேற்றுக்காலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களின் போது, போரின் போது சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கியதற்காகவும், சிறிலங்கா விமானப்படைக்கு பயிற்சிகளை வழங்குவதற்காகவும், அனைத்துலக அரங்கில் வழங்கி வரும் ஆதரவுக்காகவும். பாகிஸ்தானுக்கு சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதுடன், இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
காஷ்மீரின் தற்போதைய கலவரங்கள் குறித்து சிறிலங்கா அதிபருக்கு, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி விளக்கிக் கூறியதாக, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது,
Post a Comment