Header Ads



கத்தார் விமானம், துருக்கியில் அவசரமாக தரையிறங்கியது


துருக்கியில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது.

இஸ்தான்புல்லில் இருந்து ஏ-330 விமானம் புறப்பட்டவுடன் அதன் இயந்திர பகுதியில் தீ பொறி வெளியானதாக சொல்லப்படுகிறது.

தோஹாவுக்கு பயணப்பட்ட விமானம் இந்த சம்பவத்துக்கு பின் இஸ்தான்புல்லில் உள்ள அடாடர்க் விமான நிலையத்திற்கு திரும்பியது.

இந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், விமானத்தை விட்டு பயணிகள் சகஜமாக வெளியேறியதாகவும் கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.