Header Ads



பான் கி மூனின் கவனயீர்ப்பைப்பெற, கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி


உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு எதிர்­வரும் 31ஆம் திகதி இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் போது இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அவ­ரது கவ­னத்­திற்குக் கொண்­டு­வரும் வகை­யி­லான அமைதிப் பேர­ணி­யொன்று ஐ.நா.காரி­யா­ல­யத்தின் முன்பாக நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு விஜயம் மேற்­கொண்டு தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றி­வது போன்று கிழக்­கிற்கும் ஐ.நா. செய­லாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிய வேண்டும் என அமை­திப்­பே­ர­ணியில் வலி­ய­றுத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஐ.நா. செய­லாளர் நாய­கத்தை கிழக்­கிற்கும் அழைத்துச் செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மேற்­கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், வட,கிழக்கில் முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை, பள்­ளி­வா­சல்­க­ளுக்­கெ­தி­ரான பிரச்­சி­னைகள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்­வை­யூட்டும் பேச்­சுக்கள், ‘சிங்­ஹலே’ அமைப்­பினர் ½ மணித்­தி­யா­ல­யத்­துக்குள் முஸ்­லிம்­களை அழித்­து­வி­டுமோம் என்ற அச்­சு­றுத்­தல்கள், சவூதி சுனாமி வீட்டுத்திட்டம் என்­பன தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய மக­ஜ­ரொன்றும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­திடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய சமா­தான முன்­னணி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அமைதிப் பேர­ணியில் முஸ்­லிம்கள் பெரு­ம­ளவில் கலந்­து­கொண்டு கவ­ன­யீர்ப்­பினை வெளி­யிட வேண்­டு­மென ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தெரி­வித்தார்.

எதிர்­வரும் 31ஆம் திகதி இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கி மூன் முதலாம், இரண்டாம் திக­தி­களில் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து சந்­திப்­பு­களில் கலந்து கொள்­ள­வுள்ளார்.

ஐ.நா. செய­லாளர் நாயகம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள், வடக்கு ஆளுநர் ரெஜி­னோல்ட்­குரே வடக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆகி­யோரைச் சந்­தித்து செப்­டெம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்து சந்­திப்­பு­களில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­துடன் நிலை­மை­க­ளையும் பார்­வை­யி­ட­வுள்ளார். கொழும்பு லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் நிரந்தரமான சமாதானம் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.

பான் கி மூன் முஸ்லிம் தரப்­பு­களைச் சந்­திப்­பது தொடர்பில் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­வித்­தல்கள் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

விடிவெள்ளி ARA.Fareel

12 comments:

  1. ராஜபட்ஷ காலத்தில் UN இலங்கையில் தலையிடுவதை எதிர்த்து போராடினார்கள். முஸ்ஸிம் தலைவர்கள் முஸ்ஸிம் நாடுகளுக்கு சென்று ஜெனீவா தீர்மானங்களை எதிராக ஆதரவு திரட்டினார்கள். ஆணால் அமேரிக்கா வென்றுவிட்டது.

    இப்போது UN தலையிடவேண்டி போராடுகிறார்களாம். காமடி பேர்வளிகள்.

    முட்டாள் தலைவர்கள் அப்போது அதை எதிர்காமல் தங்களது கோரிக்கைகளையும் தீர்மானத்தில் சேர்த்து நிறைவேற்றிருக்கமுடியும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Muslim leaders should meet Banki Moon and address the grievances of Muslim refugees in North.

    ReplyDelete
  3. You are correct in some sense

    ReplyDelete
  4. But one thing for sure America will play both sides

    ReplyDelete
  5. (அஜன் அந்தோனிராஜ்அவர்களே)அப்போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டாரகள் இப்பொழுது அவர்களால் பாதிக்கப்பட்ட வர்கள் நீதி கேட்கின்றாரகள் இதில் என்ன தவறு இருக்கின்றது,
    ஒரு விடயத்தை விளங்கவேனும் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஐபக்ஸசாவுக்கு த்தானே மக்கள் வாக்களிக்க வேனும் ஏன் மாறாக நல்லாட்சிக்கு வாக்களித்தனர் விடுதலைப்புலிகலும் ராஜபக்ஸ அரசாங்கமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரித்தான்
    செயல் பட்டனர் அதனால்தான் அவர்களும் விரட்டப்பட்டனர்,
    உங்கள் கதை காக்கையின் கூட்டில் குயில் முட்டை இட்டு தன் கூடு என்று வாதிடுவதுபோல்
    உள்ளது, நான் இதில் யாரையும் கூறை கூறவில்லை சந்தர்ப்த்திற்கேற்ப மாற்றங்களினால் வந்த விபரிதம் இதனால் பாதிக்கப்பட்டது மூவினமும் பாதிக்கப்பட்டுள்ளது ஆகையினால்
    எல்லோரும் நீதி கேட்டு நிற்கின்றனர் இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் தங்களுடைய
    உறுமைக்காக போராடினார்கள் இதில் முஸ்லிம்கள் எந்த தடையாகவும் இருந்தது இல்லை
    இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்களும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளாரகள்
    அடுத்து அரசாங்கத்தின் பிரச்சனை அவர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு முடி வெடுக்க வில்லையைன்றால் அது அவர்களின் பிரச்சனை இதில் அப்பாவி முஸ்லீம்கள் ஏன் விரட்டப்படவேனும்,

    ReplyDelete
    Replies
    1. Dear friend Meera,
      அப்போது வி.புலிகளுக்கு எதிராக போரடினீர்கள் என்பது 100% பொய். ஏனெனில்
      (1) 2009 யில் LTTE அழிக்கப்பட்டு விட்டார்கள்.
      (2) தீர்மானங்களில் LTTE யின் தவறுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
      (3) USA/UK/இந்தியா உட்பட நாடுகளில் Ltte பயங்கரவாத அமைப்பாக அறிவக்கபட்டுள்ளது.
      எனவே ஜெனிவா தீர்மாணங்கள் LTTE க்கு ஆதரவாணதாக இருக்கமுடியாது.

      நீங்கள் எதிர்த்தற்கான காரணங்கள்;
      (1) இதனால் தமிழர்களுக்கு உரிமைகள் ஏதாவது கிடைத்துவிடகூடாது எனும் மனநிலை,
      (3) LTTE யில் ஏற்பட்ட கோபத்தில் சாதாரண தமிழர்களை பழிவாங்க,
      (2) பதவி/பணம்/சிறு சலுகைகள் காக ராஜபக்‌ஷாகளை குஷிபடுத்த முயற்சித்த மு/தலைவர்கள்

      Delete
  6. ராஜபக்ஷ்வின் காலத்தில், முஸ்லிம்கள் ஜெனீவாவிட்க்கு போனார்கள் விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்கள் அட்டூழியங்களை பற்றி முறியிடுவதட்காகவே தவிர ராஜபக்க்ஷவை காப்பற்றுவதற்க அல்ல . இப்போது சின்ஹல இனவாதத்துக்கு எதிராகவும் விக்னேஸ்வரனின் தீவிரவாதத்துக்கு எதிராகவும் முஸ்லிம்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் . அதட்க்காக U N இக்கு மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்கள் போவதட்கு தயாரகிவிட்டார்கள் .

    ReplyDelete
  7. Shihabdeen, ஒரு தவறை மறைக்க இன்னொரு பொய்யை சொல்ல முயலத் தேவையில்லை. தவறை தவறு என்று ஏற்றுகொள்வது, இனிவரும் சந்ததிகளாவது இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருக்க உதவும். ஜெனிவா சென்றது உண்மையில் ராஜபக்ஷக்களை காப்பாற்றுவதற்குத்தான். அதற்காகத்தான் நட்சத்திர ஹோட்டல் உபசரிப்பு, முதல்வகுப்பு விமான டிக்கட் எல்லாம் அரசால் கொடுக்கப்பட்டன. அவர்களது மொத்த செலவும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப் பட்டன.

    ReplyDelete
  8. ஹனீபா : முஸ்லீம்கள் ஜெனீவாவிட்கு போனது ராஜபக்க்ஷ புலிகளின் பயங்கரவாத்தை முற்றாக ஒலித்தது முற்றிலும் சரி என்று சொல்வதைக்கே, அதன் மறுபக்கம் என்னவென்றால், புலிகளின் பயங்கரவாத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். நீங்கள் சொல்லுங்கள் , புலிகளை முற்றாக ஒலித்தது சரியா தவறா ? தவறு என்று சொன்னால் நீங்களும் புலிகளின் பழைய உறுப்பினரா ?

    ஜெனீவாவிட்கு போனது , அதன் முழு விபரங்களும் சொல்லுகிறீரகள் , அது தவறு என்றால், அதை தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் ? சம்பந்தப்பட்டவர்ஹளுடன் பேசினீரகள ? அல்லது எமது சமூகத்துக்கு எடுத்துச் சொன்னீரஹலா ? தவறை தவறு என்று சொல்ல வேண்டும் என்பது உங்கள் கொல்ஹை :

    ReplyDelete







  9. Yes all the problem is created by Jamiathul Ulama and it's leaders.It's members acted as stooge of Rajapakshe including Niyas Moulavi.These stooge without knowing the nature of UNO,America and the west visited Geneva to stop America sponsored resolution.Now because of that Muslim world is burning.Srilankan Muslims are under atack. now going after UNO is no use and it is big joke,it is UNO wanted to do justice to the minorities then.

    ReplyDelete

Powered by Blogger.