Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில், பொதுபல சேனா தொடர்ந்து ஈடுபடுகிறது - அமெரிக்கா அறிக்கை

பொதுபலசேனா தொடர்ந்தும் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை உணர்வை ஏற்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச மதச்சுதந்திரத்துக்கான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்ந்தும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அபகீர்த்தியான கருத்துக்களையும் கிறிஸ்தவ மதத்துக்கும் எதிராக செயற்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் பௌத்த பிக்குகள் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்கத்தின்பாதுகாப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வழிபாட்டு தலங்களை மூடும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கையில் ஏனைய மதத்தலங்கள் மீது 87 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

No comments

Powered by Blogger.