Header Ads



காத­லனை கைவிட்டால் 50 இலட்சம் ரூபா பணம் - சூட்­சு­ம­ விசா­ரணையில் அம்பலமாகிய நாடகம்

காத­லித்து வந்த யுவ­தியை கழற்றி விட, அவ­ருக்கு குறுஞ்­செய்தி ஊடாக மரண அச்­சு­றுத்தல் விடுத்த காத­ல­னையும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அழ­குக்­கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் யுவதி ஒரு­வ­ரையும் பிலி­யந்­தலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். காதலி செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக சூட்­சு­ம­மான விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்த பிலி­யந்­தலை பொலிஸார் இவர்­களை நேற்று கைது செய்­துள்­ளனர்.

தனது காத­லனின் முன்னாள் காதலி என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் ஒரு யுவதி, எஸ்.எம்.எஸ். ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்­ப­தாக யுவதி ஒருவர் பிலி­யந்­தலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்­துள்ளார். தான் தனது காத­லனை அதிகம் நேசிப்­ப­தா­கவும், இந் நிலையில் காத­லனை கழற்­றி­வி­டாமல் தொடர்ந்து காத­லித்தால் தன்னை தீர்த்­துக்­கட்­டு­வ­தாக பழைய காத­லி­யாக தன்னை அடை­யாளம் காட்­டிக்­கொள்ளும் யுவதி மிரட்­டு­வ­தா­கவும், காத­லனை கைவிட்டால் 50 இலட்சம் ரூபா பணம் தரு­வ­தாக கூறி­ய­தா­கவும் முறைப்­பாட்­டா­ள­ரான யுவதி பொலி­ஸா­ரிடம் குறிப்­பிட்­டுள்ளார்.

இந் நிலையில் இது குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பிலி­யந்­தலை பொலிஸார் குறுஞ்­செய்தி வந்த தொலை­பேசி இலக்­கத்தை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன் போது குறுஞ்­செய்தி அனுப்­பிய தொலை­பேசி இலக்­கமும் அதனை பெற்­றுக்­கொண்ட தொலை­பேசி இலக்­கமும் ஒரே அடை­யாள அட்­டையில் பெறப்­பட்­டுள்­ளதை பொலிஸார் அவ­தா­னித்­தனர். இதன்­போது அவ்­வ­டை­யாள அட்டை யாரு­டை­யது என தேடிய பொலிஸார் அது முறைப்­பாட்­டா­ள­ரான யுவ­தி­யு­டை­யது என தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து முறைப்­பாட்­டா­ள­ரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் அதன் பின்னர் அவர் காத­ல­னி­டமும் வாக்கு மூலம் பதிவு செய்­தனர். காத­லனின் வாக்கு மூலத்தில் வெளி­யான தக­வல்­க­ளுக்கு அமைய அழ­குக்­கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண்­ணொ­ரு­வ­ரி­டமும் பொலிஸார் விசா­ரித்­தனர்.

இதன்­போதே காத­லியை கழற்­றி­விட காத­லனால் நடத்­தப்­பட்ட நாட­கமே இந்த மரண அச்­சு­றுத்தல் என்­பதும் அச்­சு­றுத்தல் விடுத்­தவர் பழைய காத­லி­யல்ல எனவும் அவர் அழ­குக்­கலை நிலைய ஊழியர் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த அழ­குக்­கலை நிலைய ஊழி­ய­ரான யுவ­திக்கு 5000 ரூபா கொடுத்து இந்த அச்­சு­றுத்­தலை செய்­யு­மாறு முறைப்­பாட்­டா­ள­ரான யுவ­தியின் காத­லனே அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் இது தொடர்பில் தனது காத­லியின் பெய­ரி­லேயே எடுக்­கப்­பட்ட சிம் அட்­டை­யொன்­றி­னையும் அவர் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந் நிலையிலேயே முறைப்பாட்டாளரின் காதலனையும் அவருக்கு உதவிய அழகுக் கலை நிலைய யுவதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட காதலன் கல்கிசை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.