Header Ads



சிரியாவில் துருக்கி தாக்குதல் - 35 பொதுமக்கள் படுகொலை


சிரியா மீது துருக்கி குண்டு மழை பொழிந்ததில் பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் குர்திஷ் அமைப்பினருக்கு எதிராக துருக்கி ராணுவம் ஐந்தாவது நாளாக  வான்வழி தாக்குதல் நடத்தியது. ஜாராபுல்ஸ் அருகே உள்ள ஜெப்எல்குசா கிராமத்தில் குண்டுவீசி தாக்கியதில் பொதுமக்கள் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூரை சேர்ந்த போராட்டக்காரர்கள் 4 பேர் இதில் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் அல் அமெர்னா அருகே நேற்று காலை நடத்தப்பட்ட  வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். 

1 comment:

  1. A few months ago, Turkey was supporting ISIS financially (ISIS selling oil via Turkey) & was against Rasia.

    Because NOW, USA is against Turkey, they had to surrounder to Rasia.

    As per Rasia's instructions, now fighting against ISIS.

    But their unskilled airforce is killing innocent people.

    ReplyDelete

Powered by Blogger.