Header Ads



2 கால்களும் செயலிழந்த நிலையில், வர்த்தகத்துறை பட்டதாரி

இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார்.

மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

கால்கள் செயலிழந்த நிலையில், அவரது தாய் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் அங்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் 03-08-2016 பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி வெல்லன்வில விமலரத்ன தேதரரிடமிருந்து தனது பட்டத்தை பெற்றுக் கொண்டார்.


No comments

Powered by Blogger.