125 மில்லியன் ரூபா விவகாரம் - நாமல் ராஜபக்ஸ கைது
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ச இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு நாளும் ஓடப்பிடித்து விளையாடினாங்க இனிமேல் கம்பி என்னவேன்டி வருமாக்கும்,இருந்துதான் பாரப்போமே,அங்கு போனால் நிம்மதியாக தூங்கலாம் ஏனென்றால் அதுக்குள்ள யாரும் கைவிலங்கு போடவும் வரமாட்டினம் தேடவும் மாட்டினம்
ReplyDeleteஇதுவே இவனுங்களுக்கு வேலையா போயிடுச்சி இன்னும் ஒரு நாளைக்குள் வெளிய வருவான் பின்ன இன்னொருமுறை கைது செய்வானுங்க இவனுங்களுக்கு ஓட்டு போட்ட நம்மல அடிக்கனம் செருப்பால
ReplyDelete