Header Ads



ஞானசார தேரருக்கு எதிரான அச்சுறுத்தலின் பின்னணியில் IS - பொதுபல சேனா

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று -05- பொதுபல சேனா அமைப்பினர் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த இனவாதக் கருத்துக்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் ஞானசார தேரர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த தான் தயாராக இருப்பதாக அசாத் சாலி தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியே பொதுபல சேனா அமைப்பினர் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் ஐஎஸ் அமைப்பினர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான அச்சுறுத்தலின் பின்னணியில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

குறித்த முறைப்பாட்டை மாகல்கந்தே சத்தாதிஸ்ஸதேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஆகியோர் மேற் கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக்கருத்து வெளியிட்ட பொது பல சேனா அமைப்பின் மாகல்கந்தே தேரர், பொலிசார் சட்டத்தை சரியான முறையில் செயற்படுவத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

2 comments:

  1. இவன் ஒரு வெங்காயம்.

    ReplyDelete
  2. This BALUSAARA is nothing for IsIs he is just a street dog for them, who cares him he only bark in the street

    ReplyDelete

Powered by Blogger.