Header Ads



மைத்திரி - ரணில் நல்ல நண்பர்கள், எந்த மோதலும் இல்லை - இது மங்களவின் சான்றிதழ்

ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளதாக சில ஊடகங்கள்ஊடாக பொய் வதந்திகள் பரப்பப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய இரண்டு தலைவர்களும் நல்லநண்பர்களாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் இரண்டு கட்சியின் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒன்றாக நாட்டைஆள்வதாகவும், விசேடமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபாலதலைமையிலும், ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலும்நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறப்பம்சம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு தடவை நாட்டில் குடும்ப ஆட்சி ஏற்படாமல்,ஜனநாயகத்தைஉறுதிப்படுத்துவதுடன் மற்றைய பக்கத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.