Header Ads



"முஸ்லிம்களின் நிதானமும், மௌனமும் அவர்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய தோல்வி"

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

அன்று "ஹலால்" வியாபாரக் குறியீடு அவர்களுக்கு போதிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தது, அளுத்கமை வரை அவர்கள் பயணித்தார்கள், இன்று அல்லாஹ் ரஸூல் வரை அவர்களது அடாவடித் தனம் நீளுகின்றது.

இன்று, உம்மத்தின் உயிர் நாடியில் கை வைத்து உசுப்பேற்றி வம்பிற்கு இழுத்து தாம் சார்ந்த சமூகத்தின் மதத்தின் காவலர் தாமென மீண்டும் மீண்டும் விளம்பரப் படுத்திக் கொள்ளும் தேவை அவர்களுக்கு இருக்கின்றது, முஸ்லிம்களின் நிதானமும், மௌனமும் அவர்கள் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய தோல்வியாகும்.

இனி ஒப்பந்த அடிப்படையில் அவர்களது தாளத்திற்கு எதிர்வினையாற்ற வல்ல வில்லர்களாகவும் தமது சமூகத்தின் ஹீரோக்களாகவும் நடிக்க விரும்புகின்ற சில உஷார் மடையர்கள் தேவைப் படுகின்றார்கள்.

விரக்தியுற்றுள்ள அரசியல் காடையர்களின் இறுதி தஞ்சம் இன மத வெறி என்பதனால் அடுத்த தரப்பிலும் சம பங்காளிகள் இருக்கின்றார்களா என்ற வேட்டையில் சிலரைத் தேடிப்பிடித்து சீண்டிப் பார்க்க எத்தனிக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் அடங்காத சில பிள்ளைகளை தேடிப்பிடித்து அரங்கேற்றிப் பார்த்தார்கள், பாரம்பரிய முஸ்லிம்கள் அடிப்படைவாத வஹ்ஹாபி ஸலபி முஸ்லிம்கள் என எம்மைக் கூறு போட்டு காரியம் பார்த்தார்கள்.

எங்களுக்கு முன்னுள்ள மிகப் பெரிய சவால் இன மத வெறிக் காடையர்கள் அல்ல, மாறாக எமது உள்வீட்டில் ஒருமைப் பாட்டையும், கட்டுக் கோப்பையும் ஒழுங்கையும் பேணுவதாகும்.

உம்மத்திற்கெதிரான மிகப் பெரும் சவால்கள் எப்பொழுதும் உள்வீட்டிலிருந்தே முளை விட்டு விருட்சங்களாகின்றன.

4 comments:

  1. Its correct.Unity patient insha allah WE WILL BE SUCCESS FOR EVER

    ReplyDelete
  2. Well said!!. There are Facebook heroes in our community who use filthy language in the social media to show their solidarity with the community. This is a shameful act of our younger generation who have no basic knowledge of Islam.

    ReplyDelete
  3. Jazakallah, well said.

    ReplyDelete

Powered by Blogger.