Header Ads



ஜனாதிபதி திட்டவட்டமாக மறுப்பு

கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பாதயாத்திரைக்கு தான் அனுமதியளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, தமது பாதயாத்திரை குறித்து ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்துக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

தான் அவ்வாறு எந்தவொரு அங்கீகாரமோ, ஆதரவோ வெளிப்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரைக்கு தான் ஆதரவளித்துள்ளமை குறித்து பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எந்தவொரு கட்டத்திலும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைக்கும் தனது ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.