பெருநாளை புரிந்துணர்வுடன் கொண்டாடுவோம்
(விடிவெள்ளி பத்திரிகையில் -05- இன்று வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை இன்று மாலை பார்க்குமாறும் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.
அதேபோன்று மற்றொரு சாரார் நேற்றைய தினமே பிறையை பார்க்குமாறு அறிவித்திருந்தனர். சர்வதேச பிறை அல்லது சவூதி அரேபியாவை பின்பற்றும் சாராரும் தமது கோட்பாடுகளின் அடிப்படையில் பெருநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
துரதிஷ்டவசமாக பிறை பார்ப்பதற்கான நாளுக்கு சில நாட்கள் முன்பாகவே சமூக வலைத்தளங்களிலும் பயான்களிலும் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் தொடங்கிவிட்டன. வழக்கம் போன்றே இந்த வாதங்கள் எந்தவித தீர்மானமுமற்று முரண்பாட்டை மென்மேலும் கூர்மைப்படுத்தவே வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்த கருத்து முரண்பாடு தீர்க்கப்படக் கூடிய ஒன்றல்ல என்பதில் பல அறிஞர்களும் உடன்படுகின்றனர். அதனால் அவர்கள் கூறும் ஆலோசனை, நீங்கள் விரும்பியவாறு பெருநாளைக் கொண்டாடுங்கள்; தயவு செய்து பிறை விவகாரத்தை காரணம் காட்டி சமூக ஒற்றுமையை குலைத்துவிடாதீர்கள் என்பதுதான்.
இலங்கையில் பிறை விவகாரம் கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்களுக்கு வித்திட்டதை நாம் அறிவோம். இதனால் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. ஒரே வீட்டில் இரண்டு சாராராக பிரிந்து பெருநாள் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாளில் முகத்தைக் கூட பார்க்காது கோபித்துக் கொள்கின்ற போக்குகளும் நடந்துள்ளன. இவை இம்முறையும் நடக்காது என்றில்லை.
ஆனால் நாம் விரும்புவதெல்லாம் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான். பிறையினைக் காரணம் காட்டி குடும்பத்தினதும் சமூகத்தினதும் ஒற்றுமையை சீர்குலைப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. எனவேதான் தயவு செய்து பிறையை காரணம் காட்டி பிரச்சினைகளை வளர்க்காது ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் பெருநாளை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை இன்று மாலை பார்க்குமாறும் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.
அதேபோன்று மற்றொரு சாரார் நேற்றைய தினமே பிறையை பார்க்குமாறு அறிவித்திருந்தனர். சர்வதேச பிறை அல்லது சவூதி அரேபியாவை பின்பற்றும் சாராரும் தமது கோட்பாடுகளின் அடிப்படையில் பெருநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
துரதிஷ்டவசமாக பிறை பார்ப்பதற்கான நாளுக்கு சில நாட்கள் முன்பாகவே சமூக வலைத்தளங்களிலும் பயான்களிலும் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் தொடங்கிவிட்டன. வழக்கம் போன்றே இந்த வாதங்கள் எந்தவித தீர்மானமுமற்று முரண்பாட்டை மென்மேலும் கூர்மைப்படுத்தவே வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்த கருத்து முரண்பாடு தீர்க்கப்படக் கூடிய ஒன்றல்ல என்பதில் பல அறிஞர்களும் உடன்படுகின்றனர். அதனால் அவர்கள் கூறும் ஆலோசனை, நீங்கள் விரும்பியவாறு பெருநாளைக் கொண்டாடுங்கள்; தயவு செய்து பிறை விவகாரத்தை காரணம் காட்டி சமூக ஒற்றுமையை குலைத்துவிடாதீர்கள் என்பதுதான்.
இலங்கையில் பிறை விவகாரம் கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்களுக்கு வித்திட்டதை நாம் அறிவோம். இதனால் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. ஒரே வீட்டில் இரண்டு சாராராக பிரிந்து பெருநாள் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாளில் முகத்தைக் கூட பார்க்காது கோபித்துக் கொள்கின்ற போக்குகளும் நடந்துள்ளன. இவை இம்முறையும் நடக்காது என்றில்லை.
ஆனால் நாம் விரும்புவதெல்லாம் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான். பிறையினைக் காரணம் காட்டி குடும்பத்தினதும் சமூகத்தினதும் ஒற்றுமையை சீர்குலைப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. எனவேதான் தயவு செய்து பிறையை காரணம் காட்டி பிரச்சினைகளை வளர்க்காது ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் பெருநாளை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
Post a Comment