Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரியில் ரம்ஸான் நல்லிணக்க விழா (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில்  ரம்ஸான் நல்லிணக்க விழா  இன்று(28) காலை 10 மணியளவில் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது யாழ் கல்வி வலயத்தினை சேர்ந்த 100க்கு அதிகமான 3 பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக யாழ்  நாவாந்துறை மகாவித்தியாலயம்,வைத்திஸ்வரா கல்லூரி,கொட்டடி நவசிவாயம் பாடசாலை ஆகியவற்றுடன் யாழ் ஒஸ்மானியா கல்லூரியும் இணைந்து கலை கலாசார நிகழ்வுகளை மேடை ஏற்றின.

முதலில்  கிராஅத் ஓதப்பட்டு ,பாடசாலை கீதம் இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது. அடுத்து மாணவர்களின் கோலாட்டம்,பாட்டு,நாடகம் என நிகழ்வுகள் நடைபெற்றன.




No comments

Powered by Blogger.