சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை (படங்கள்)
அம்பாறை மாவட்டத்தில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை மிகவும் முறையில் இன்று இடம்பெற்றது. திடல்களிலும்,பள்ளிவாசல்களிலும் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
பெருநாள் தொழுகையில் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர். சம்மாந்துறையிலும் நோன்புப் பெருநாள் தொழுகை
திடல்களிலும்,பள்ளிவாசல்களிலும் இடம்பெற்றது.
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும் கொத்பா பிரசாங்கத்தையும் நிகழ்த்தினார் இதன்போது உலக நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் துன்பங்களில் இருந்து மீளவும் துஆ பிராத்தனை செய்யப்பட்டது.
Post a Comment