Header Ads



ஜாகிருக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அறிவித்த சகல ஆர்ப்பாட்டங்களும் ரத்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து.

ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது .

என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் அறிவித்துள்ளது.

டாக்டர் ஸாகிர் நாயக் மீது போலியான குற்றச் சாட்டுக்களை சுமத்தி, தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்த முயன்ற இந்திய ஆளும் BJP அரசின் சூழ்ச்சிகளை அல்லாஹ் முறையடித்து எதிரிகளின் முகத்தில் கரி பூசி விட்டான். - அல்ஹம்து லில்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலுமாக சுமார் 20 இடங்களில் ஆர்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் மும்பை காவல் துறையின் அறிவிப்பை தொடர்ந்து அனைத்து ஆர்பாட்டங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

No comments

Powered by Blogger.