Header Ads



விமான நிலையங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் - கட்டுநாயக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு


கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்தே கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என தம்மிக விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமான நிலைய சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.