Header Ads



இணையத்தளத்துக்கு அடிமையாகி, மனநோயாளியாகும் மாணவர்கள் - இலங்கையிலிருந்து எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி கராப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மனநல வைத்திய ஆலோசகர் வைத்தியர் ரமணி ரட்ணவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், 

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வி மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாக மாறியுள்ளது.

எனினும், இணைய மற்றும் அதனுடன் சார்ந்த தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை வெகுவாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகும் போது, மிகுந்த மன அழுத்தத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, அவர்களை ஒரு நல்ல சூழ்நிலையில் தயார்படுத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாரிய கடமையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்வதன் ஊடாக மாணவர்களை சாதனையார்களாக மாற்ற முடியும்.

இன்றைய காலகட்டத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கு இணையம் மற்றும் அதனுடன் சார்ந்த தொழில்நுட்பம் தேவையை ஊக்கப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று.

இதேவேளை, இணையத்தளத்துக்கு அடிமையாவதன் மூலம், மாணவர்கள் பரீட்சைகளில் தோல்வியயை எதிர்கொள்ளும் போது அவர்களின் மனநிலையை பாதிக்கின்றது.

போதைப்பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்பினை போன்று, இதுவும் மாணவர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதிகமாக சமூக வலைத்தளங்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்தும் மாணவர்களுக்கு, எந்தவகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் எம்மிடம் சாட்சிகள் உள்ளன.

இதன் காரணமாக, இணையத்தளத்துக்கு அடிமையாகின்றமை ஒரு மனநோயாகவே கருதப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.