Header Ads



ஓட்டமாவடி - மாஞ்சோலையில், ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு


ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால்  ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆப் பள்;ளிவாசல் திறப்பு விழா 22-07-2016 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகஸ்தர் அஷ;nஷய்க் ஏ. எல். பீர்முஹம்மது தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக அஷ;nஷய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். 

இதில் குத்பா பேருரையை அஷ;nஷய்க் கலாநிதி அம்ஜத்த ராஸிக் உளத்தூய்மை என்ற தலைப்பிலும் , அஷ;nஷய்க்  முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி மஸ்ஜித் ஒழுக்க மாண்புகளைக் கட்டியெழுப்பும் கேந்திர நிலையம் என்ற தலைப்பிலும் அஷ;nஷய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் (ஸலபி) அஹ்லுஸ் ஸுன்னாவின் பார்வையில் நபித்தோழர்கள் என்ற தலைப்பிலும் அஷ;nஷய்க் கலாநிதி எம். எல். முபாரக் மதனி நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்கள் என்ற தலைப்பிலும் நன்றியுரையை அஷ;nஷய்க் ஹபீப் ரியாதி உரையாற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி-

No comments

Powered by Blogger.