Header Ads



அரசியலில் சகலதையும் கற்றுவிட்டு, பதுளையிலிருந்து மறுபிரவேசத்தை ஆரம்பிப்பேன் - பஸில்

அரசியலில் இன்னும் கற்கவேண்டிய பாடங்கள் அதிகமாக உள்ளது. அனைத்தையும் கற்று தெளிந்து விட்டு எனது அரசியல் மறுபிரவேசம் பதுளையிலிருந்து ஆரம்பமாகும் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் மஹிந்த ராஜபக்ஸ அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

தற்போது அரசியலில் இருந்து சற்று விலகியிருப்பதற்கான காரணம் கூட அரசியலைப்பற்றி நன்கு அறிந்து கொள்வதற்காகவே என கூறினார்.

இதற்கு, மக்களின் ஆதரவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தலைவர்களின் ஆதரவுகளும் தமக்கு கிடைத்திருப்பதாக பஸில் குறிப்பிட்டார்.

தனது அரசியல் மறு பிரவேசம் விரைவில் பதுளையிலிருந்து ஆரம்பமாகும் என அதிரடியாக கூறினார்.

மேலும், நீண்டகாலமாக சேவையில் இருக்கும் தேர்தல் ஆணையாளர் தற்போது தேர்தலை நடாத்துவதற்கு காலம் தாமதம் எடுக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என கூறினார்.

மேலிடத்து அழுத்தங்கள் கூட தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் எனவும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.