Header Ads



நாட்டில் பிக்குகளே அதிகமான ஊழல்களை செய்கின்றனர்

தற்போது நாட்டில் பிக்குகளே அதிகமான ஊழல்களை செய்து வருவதாக நியாயமான சமுதாயத்திற்கான மக்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இன்று -12- தெரிவித்தார்.

மேலும் நாட்டினை படு பாதாளத்தில் தள்ளி ஊழல் ஆட்சியினை புரிந்து வந்த மஹிந்த ராஜபக்ஷ தன்னைச் சுற்றிலும் திருடர்களையும், ஊழல் செய்பவர்களையுமே வைத்திருந்தார் என சுட்டிக்காட்டினார்.

அதே சமயம் மகிந்தவினால் பாதுகாக்கப்பட்டவர்களாக கூறப்படும் பிக்குகளும் ஊழல் செய்பவர்களாகவே காணப்படுகின்றனர். பிக்குகளின் நடத்தைகளை பார்க்கும் போது பிக்குகளா? எனும் சந்தேகம் எழுகின்றது எனவும் சமீர பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் பில்லியன் கணக்கான ஊழல்களில் ஈடுபட்டவர்களும் தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டு கொண்டு வருகின்றமை கண்டனத்திற்குரியது.

இவ்வாறான ஊழல்களில் ஈடுபடுகின்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் எனவும் சமீர பெரேரா அரசிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.