Header Ads



மைத்திரி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளார்

சுதந்திரக் கட்சியை பாதகாப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தீர்மானங்களை எடுப்பார் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து அவர்,

சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி விரைவில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க உள்ளார்.

எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க கீழ் மட்டத்திலிருந்து கட்சியை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்படும் அரசியல் கட்சிகள் குழுக்கள் சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையாது.

கடந்த காலங்களில் இவ்வாறு உருவாக்கப்பட்ட சக்திகள் நீர்த்துப்போயிருந்தன. ஊழல்மோசடி குற்றம் சுமத்தப்பட்ட சிறு குழுவொன்று அவற்றை மூடி மறைக்கும் நோக்கில் புதிய கட்சிகளை அமைக்க முயற்சிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Dont protect party.let him to protect our COUNTRY

    ReplyDelete

Powered by Blogger.